வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே தம்பி, அவரது மனைவியை கொன்று புதைத்த பெண், மகளுடன் சேர்ந்து சம்மந்தியையும் கொன்று புதைத்துள்ளார். அந்த சடலமும் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. திண்டுக்கல்லை சேர்ந்த பைனான்சியர் செல்வராஜ் (50). இவர் தனது மனைவி வசந்தாமணியுடன் (42), திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தண்டகுமாரவலசில் உள்ள அக்கா கண்ணம்மாள் வீட்டுக்கு கடந்த 10ம் தேதி சென்றார். அங்கு தனது மகன் திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர். சொத்து விற்பனையில் கிடைத்த பணத் தகராறில் தம்பியையும் அவரது மனைவியையும் கண்ணம்மாளும், அவரது மருமகன் நாகேந்திரனும் கொலை செய்து வீட்டு பின்புறத்தில் புதைத்தனர். இதுதொடர்பாக வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து கண்ணம்மா, நாகேந்திரன், அவரது மனைவி பூங்கொடி உள்பட 4 பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இதனிடையே, நாகேந்திரனின் சகோதரி நாகேஸ்வரி தனது தாய் ராஜாமணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாயமானதாக வெள்ளக்கோவில் போலீசில் புகார் அளித்தார்.