மராட்டிய மாநில முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனைக்கு வழங்க உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

ஸ்ரீநகர்: மராட்டிய மாநில முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனைக்கு வழங்க உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். முதல் அமைச்சர் யார் என்பது பாஜக- வுடன் கலந்து  பேசி முடிவு எடுக்கப்படும். மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றது குறித்து உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். பதவிக்காக தான் அலையவில்லை என்று சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். தேர்தலுக்கு முன்பே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை பாரதிய ஜனதா கட்சி மதிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துளளார். மேலும் மக்களுக்கு நல்ல ஆட்சி வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: