நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தின் மண் போன்ற மாதிரியை நாசா உருவாக்கி இருந்தது. இதன்மூலம், வருங்காலத்தில் செவ்வாய் கிரகம் மற்றும் நிலவில் பயிர்களை விளைய வைக்கலாம் என்று நாசா திட்டமிட்டது. இதுகுறித்து வெஜினின்ஜென் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் வேகர் வாமனிங் கூறுகையில், “செவ்வாய் கிரகம் மற்றும் நிலவின் மாதிரி மண்ணில் பயிரிடப்பட்ட தக்காளி விதை முளைக்க எல்லா சாத்தியமும் உள்ளது. வேளாண்மையின் அடுத்தக்கட்டத்தில் நாம் கால் பதித்துட்டோம் என்பதைதான் இது காட்டுகிறது. இதை உண்மையாகவே சிலிர்ப்பானதாக உணர்கிறோம் ” என்றார்.