வானியலாளர்கள் சனியில் ஒரு புதிய வகை புயலைக் கண்டறிந்துள்ளனர். இப்போது வரை, வானியலாளர்கள் இரண்டு வகையான சனி புயல்களை மட்டுமே கண்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. முதல் முறை உருவான புயல் 2,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தன. இந்த புயல்கள் சில நாட்களுக்கு பிரகாசமான மேகங்களாகத் தோன்றின. தற்போது, புதிதாகக் காணப்பட்ட புயல் நான்கு நடுத்தர புயல்களின் தொடராக இருந்தது. ஒவ்வொன்றும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தன, சுமார் 1.5 வாரங்கள் முதல் ஏழு மாதங்கள் வரை நீடித்ததாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும்.