கூட்டுறவு துறை பணியாளர்களுக்கு ‘லீவ்’ இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் பண்டிகை காலத்தில் கூட்டுறவு துறையால் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுடன் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.  கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வடகிழக்கு பருவமழை காலத்தில் விடுப்பில் செல்வதை தவிர்த்து பொதுமக்களுக்கு சிறப்பாக பணியாற்றவும், இதுபோன்ற காலங்களில் அனைவரும் விடுமுறை எடுக்காமல் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்றார்.

Related Stories: