சீனாவில், விவசாயியின் கையில் அகப்பட்ட அரிய வகை ஆந்தை குஞ்சுகள் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன. ஜியாங்சி மாகாணத்திற்கு உட்பட்ட சியாஜியாங் பகுதியில் வசித்து வரும் லியூ என்ற விவசாயி, அண்மையில் மலையடிவாரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேயிலை விதைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிய வகை குஞ்சுகள் தட்டுதடுமாறி பறப்பதை கண்ட அவர், அவற்றை தனது வீட்டுக்கு எடுத்து வந்து, உள்ளூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.