திருப்பூர்: திருப்பூர் கண்டியன் கோவில் அருகே மேற்கூரை இல்லா குளியலறை பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் வீடியோ எடுத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கருப்பு பேட்ஜ் அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.இது குறித்து, கண்டியன் கோவில் பகுதி பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோவில் கிராமம் பகுதியில் சுமார் 1000 குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு, மேற்கூரை இல்லாத குளியலறைகள்தான் பெரும்பாலும் உள்ளன. இப்பகுதியில் குழாய் பதிக்கும் பணிக்காக கடந்த 14ம் தேதி பாரத் பெட்ரோலிய நிறுவனம் சில நபர்களை வைத்து ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் எங்கள் பகுதியை படம் பிடித்தது.
திருப்பூர் அருகே மேற்கூரை இல்லாத குளியலறையில் குளித்த பெண்களை ட்ரோன் மூலம் படம் பிடிப்பதா?: பெட்ரோலியம் நிறுவனம் மீது கலெக்டரிடம் புகார் மனு
- பெண்கள்
- கழிவறைகள்
- கலெக்டர்
- திருப்பூர்
- கூரை
- குளியலறையில்
- திருப்பூர் ட்ரோன்
- மனுதாரர்
- பெட்ரோலிய நிறுவனம்