நூறு சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி சங்கை. கோமதிஅம்பாள் பள்ளியில் ரங்கோலி கோலம்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி  பள்ளி வளாகத்தில் 100 அடி நீளத்தில் கோலப்பொடியால் ரங்கோலி வரையப்பட்டது. இதனை இப்பள்ளி மாணவர்கள் சுமார் 300 பேர் பங்கேற்று வரைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஆதிநாராயணன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். பள்ளிச் செயலர் ஐ.திலகவதி, முதல்வர் ந.பழனிச்செல்வம், நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ராஜேஷ்கண்

ணா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: