வெளிமாநிலத்திலிருந்து இன்று தமிழகம் வந்த 41 பேர் பாதிப்பு; தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 7,987 பேர் பாதிப்பு: 29 பேர் பலி…சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 62 ஆயிரத்து 935 (9,62,935) ஆக  உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா  பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை  வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  * தமிழகத்தில் மேலும் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்  மூலம் மொத்த பாதிப்பு 9,62,935 ஆக அதிகரித்துள்ளது.* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 4,176 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம்  மொத்தம் 8,91,839 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த  பலி எண்ணிக்கை 12,999 ஆக உயர்ந்துள்ளது.* அரசு மருத்துவமனையில் 15; தனியார் மருத்துவமனையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.* சென்னையில் இன்று ஒரே நாளில் 2,558  பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மொத்தம் 2,74,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 2,08,79,495 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று  மட்டும் 95,387 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* தமிழகத்தில் தற்போது 58,097 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,81,247 பேர் ஆண்கள்,  இன்றைக்கு மட்டும் 4,797 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,81,652 பேர் பெண்கள்,  இன்றைக்கு மட்டும் 3,190 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 262 மையங்களில் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 193.* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 41 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. * மேற்கு வங்கம்-12.* பீகார்-7.* ஆந்திரா-3.* கர்நாடகா-3.* தெலுங்கானா-3.* ஜார்கண்ட்- 3.* மகாராஷ்டிரா-2.* அருணாச்சலப்பிரதேசம்-1.* சத்தீஸ்கர்-1. * குஜராத்- 1.* கேரளா-1.* புதுச்சேரி-1.* உத்தரப்பிரதேசம்-1. * டெல்லி-1.* ஒடிசா-1. …

The post வெளிமாநிலத்திலிருந்து இன்று தமிழகம் வந்த 41 பேர் பாதிப்பு; தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 7,987 பேர் பாதிப்பு: 29 பேர் பலி…சுகாதாரத்துறை அறிக்கை.!!! appeared first on Dinakaran.

Related Stories: