தேனி: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான வெள்ளிமலை, உடங்கல், ஓயம்பாறை, வருசநாடு, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டியது. இதனால் வைகையின் பிறப்பிடமாகவும், வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாகவும் விளங்கும் மூல வைகை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.