உலகம் சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்துகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துருக்கி அதிபர் எர்டோகனுக்கு கடிதம் Oct 17, 2019 துருக்கி குர்துகளின் எர்டோகன் டிரம்ப் தாக்குதல் துருக்கி குர்தியர்கள் வடக்கு வடக்கு சிரியா எங்களுக்கு வாஷிங்டன்: சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்துகளுக்கு எதிராக துருக்கி நடத்தும் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் துருக்கி அதிபர் எர்டோகனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ட்ரம்ப் எழுதிய கடிதத்தில், பேச்சுவார்த்தை மூலம் குர்து படையினருடனான பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதற்கு நீங்களும் பொறுப்பேற்கத் தேவையில்லை. துருக்கி மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்காக நானும் பொறுப்பேற்கத் தேவையில்லை. நீங்கள் சரியான வழியில் செயல்பட்டாலும், மனிதாபிமான வழியில் நடந்தால் மட்டுமே உலகம் உங்களை சாதகமாகப் பார்க்கும் எனவே கடினமான நபராக இருக்காதீர்கள். முட்டாளாக இருக்காதீர்கள் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் வசம் இருக்கும் எல்லையோரப் பாதுகாப்பை ஒட்டிய பகுதிகளில் தாக்குதல் நடத்த எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றது. சிரியாவில் துருக்கிப் படையினரும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குழந்தைகள் ஆவார்கள். இந்நிலையில் சிரியாவில் துருக்கியின் அத்துமீறலை சீனா கண்டித்துள்ளது. முன்னதாக சிரியாவின் குர்து படைகள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு.. விபத்தின்போது பாலத்தில் பணியாற்றிய 4 பேரின் நிலை?
காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும்: அமெரிக்கா கருத்து!
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை; 33 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்
அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலில் 11 இந்தியர்கள் இருந்ததாக தகவல்
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என விரும்புவதாக அமெரிக்கா கருத்து
சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் விமான தளத்தின் மீது தாக்குதல்: பலுசிஸ்தான் போராளிகள் அதிரடி