விருதுநகர்: விருதுநகரில் அம்மா உணவகத்தில் சமைக்கப்படும் உணவுகள் தரமின்றி இருப்பதால், குப்பையில் கொட்டப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் ரயில்வே பீடர் ரோடு மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள் நகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலையில், இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் ரூ.5க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் விற்பதால், ஏற்படும் இழப்பு நகராட்சி மூலம் ஈடு செய்யப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30 முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகிறது.