விழுப்புரம், அக்.16: விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்த ஓபிஎஸ் பொங்கல் பண்டிகைக்கு 1000 வாங்கிவிட்டு வாயமட்டும் திறக்கமாட்டீங்களே என ஓபிஎஸ் பேசியதால் பெண்கள் அதிருப்தி அடைந்தனர். விக்கிரவாண்டி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காணையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஜெயலலிதா ஆட்சியின் திட்டங்கள் சென்று கொண்டுதான் இருக்கிறது. கைவிடப்படவில்லை. கூடுதலாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.