தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. இதுவரை அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜாபுரத்தை சேர்ந்த வாலிபரும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் கடந்த 10ம் தேதி காலையில் வனதர் பகுதி செல்லும் வழியில் நின்று பேசி கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அவ்வழியாக வந்த திருச்செந்தூர் காவல்நிலைய காவலர் சசிகுமார் இருவரையும் செல்போனில் படம் பிடித்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபர் பணம் எடுக்க சென்றதாகவும் அப்போது தனிமையில் இருந்த சிறுமியிடம் காவலர் சசிகுமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.