சென்னை: தீபாவளிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல, இதுவரை 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் 2.55 கோடி வசூலாகியுள்ளது என ேநற்று நடந்த போக்குவரத்துத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய விழாக் காலங்களில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பிட ஏதுவாக, போக்குவரத்துத்துறையின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்துத்துறையின் சார்பில், மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையக கருத்தரங்கக் கூடத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில் தீபாவளி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் மேலாண் இயக்குநர் இளங்கோவன், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கணேசன் மற்றும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களின் துணை மேலாளர்கள் (வணிகம்) ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாவது: தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில்நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி மற்றும் கே.கே. நகர் ஆகிய 5 இடங்களிலிருந்து அக்ேடாபர் 24ம் தேதி முதல் 26 வரை இயக்கப்படும். இதில் தினசரி இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 4,265 என மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக, சென்னையிலிருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும்.