மாவ்: உத்தரபிரதேசம் மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவ் மாவட்டத்தின் முகமதாபாத் எனும் பகுதியில் சிலிண்டர் வெடித்து இரண்டு மாடி கட்டிடம் இடிந்ததில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பெரிய சத்தத்துடன் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமதாபாத் அருகே உள்ள வாலித்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.