திட்டக்குடி: பொது சுகாதாரத்துறை சார்பில் திட்டக்குடி காவல் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் அரசு சித்தா மருத்துவர் பெரியசாமி கலந்து கொண்டு பேசும்போது, டெங்குநோயை பரப்பும் கொசுக்கள் பகலில் குறிப்பாக காலை 9 மணிமுதல் 11 மணிவரையிலும் மாலையில் 3 மணிமுதல் 5 மணிவரையிலும் தான் அதிகமாக கடிக்கும். வீடுகளின் உட்பகுதியில் இந்த கொசுக்கள் அதிகமாக இருக்கும் இந்த நோயின் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைகளை அணுக வேண்டும் வீடுகளில் வெளியே கிடக்கும் உபயோகமற்ற பாத்திரங்களை தண்ணீர் தேங்காத வகையில் கவிழ்த்து வைக்க வேண்டும்.