கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துகொட்டுவதால் சுற்றுலாபயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. மலையோரப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகமாகப் பெய்கிறது. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதுடன், அணைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டியது, இதன்காரணமாக கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.