சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.