சென்னை: 2018 ல் சென்னை அண்ணா நகரில் 19 வீடுகளில் நகை கொள்ளை போன வழக்கில் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. 2018-ம் வருடம் நடந்த கொள்ளை தொடர்பாக திருவாரூரில் முருகனின் கூட்டாளிகள் மட்டும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் தலைமறைவானதால் கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறியது. முருகனின் கூட்டாளிகளிடமிருந்து 3 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி, 1000 யூரோ டாலர், 2 வாக்கி டாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் தலைமறைவானதால் கைது செய்ய முடியாமல் போலீசார் திணறியது குறிப்பிடத்தக்கது. தற்போது திருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான நகை கொள்ளைபோன வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டுள்ளான். முருகனை போலீஸ் காவலில் எடுத்தால் 2018-ல் நடந்த கொள்ளையில் மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்யமுடியும் என போலீசார் கருதகின்றனர். லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இதுவரை ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் மட்டுமே போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.