டெஹ்ரான்: ஈரான் நாட்டை சேர்ந்த 2 எண்ணெய் கப்பல்கள் மீது சவுதி அரேபியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலைக மீது டிரோன் எனப்படும் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக பொறுப்பேற்ற பிறகும், ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த தாக்குதலை நடத்தவில்லை என ஈரான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றது.