சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னைக்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகை புரிவதை தமிழக காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. இன்றைக்கும் பல்வேறு பிரச்னைகளில் இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக சீனா செயல்பட்டு வருகிறது. இலங்கையில் சீனாவின் முதலீடுகள் குவிக்கப்பட்டு வருகின்றன. வங்காள விரிகுடாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தி வருகிறது.