தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு, நதிகள் மறுசீரமைப்பு கழக மேலாண் இயக்குனராக சத்யகோபால் ஐஏஎஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு, நதிகள் மறுசீரமைப்பு கழக மேலாண் இயக்குனராக சத்யகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற சத்யகோபாலுக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்கியது. குடிமராமத்து மற்றும் நீர்வள மேம்பாட்டுப் பணிகளை சத்யகோபால் ஐஏஎஸ் மேற்பார்வையிடுவார் என்று அரசு தெரிவித்துள்ளது. சத்யகோபால் பதவியேற்ற நாளில் இருந்து ஓராண்டு பதவியில் இருப்பார் என்று அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: