டமாஸ்கஸ் : அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சிரியாவில் உள்ள குர்து படையினர் மீது துருக்கி ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. சிரியாவில் முடிவில்லாமல் தொடரும் போரில் அமெரிக்கா இனியும் பங்கேற்காது என்று கடந்த திங்களன்று தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கி கொள்ளப்படும் என்றார். இதையடுத்து அமெரிக்க படையினர் சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில் சிரியாவில் உள்ள குர்து படையினர் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பொருளாதாரத்தையே அழித்துவிடுவதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.