கோவை:இலங்கை கொழும்புவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது முகமது அக்பர் அலி, அன்சார் அலி, அப்துல் காதர், காந்தர் ஐதர் மற்றும் சாகுல் அமீது ஆகிய 5 பேர் கொண்டு வந்த பார்சல்களை பிரித்து சோதனையிட்டனர். அப்போது அந்த பார்சலில் இந்தியாவில் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.