சென்னை: இரு நாடுகளின் பேச்சுவார்த்தைக்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்று திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் அறிக்கை வெளியிட்டதற்கு நன்றி என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் 11, 12, 13ம் தேதி மாமல்லபுரம் வருகை தர உள்ளனர். இதனையொட்டி, அவர்களை மாமல்லபுரம் நகரம் சார்பில், வரவேற்கும் விதமாக பேரணி நடந்தது. மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் புறப்பட்ட பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், 4 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பேரணியில் கலந்துக் கொண்டனர்.