சென்னை: தமிழ்நாட்டில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார். கடந்த 1977-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 6 முறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 7-வது முறையாக தற்போது டிஜிட்டல் முறையில் பொருளாதார கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பில் 33,000 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 5000 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். சுமார் மூன்று மாதங்கள் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள், நகரங்கள் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் குறித்தும் அவற்றால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.