காஞ்சிபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே இந்திய - சீன போர் கப்பல்கள் ரோந்து பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சீன நாட்டு தலைவர்கள் சந்தித்து கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வானது மாமல்லபுரத்தில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக மாமல்லபுரத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடற்கரை கோவில் அருகே கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் ஒன்றாக நிகழ்ச்சிகளை பார்வையிடவுள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்பு கருதி இரு நாட்டு கடற்படைகளின் 4 போர் கப்பல்கள் மாமல்லபுரம் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. நான்கு நாட்டிகல் மைல் தொலைவிற்கு ஒரு போர் கப்பல் என 10 நாட்டிகல் மைல் தொலைவை கண்காணிக்கும் வகையில் இரு நாடுகளும் தலா 2 போர் கப்பல்களை மாமல்லபுரம் கடலில் நிறுத்தி வைத்துள்ளனர்.