இஸ்லாமபாத் : தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை என்று சர்வதேச நிதிநடவடிக்கை பணிக்குழு குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக எஃ.ஏ.டி.எஃப் எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,தீவிரவாதத்திற்கு எதிராகவும் அவற்றை ஒடுக்குவது தொடர்பாகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அளித்த 40 தீர்மானங்களில் 36 தீர்மானங்களை பாகிஸ்தான் நிறைவேற்ற தவறிவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை தனது மண்ணில் இருந்து அகற்றுவதாக ஜக்கிய நாடுகள் அவையில் பாகிஸ்தான் குறிப்பிட்ட 4 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு கூட முயற்சிக்கவில்லை என்றும் எஃ.ஏ.டி.எஃப் சுட்டி காட்டி இருக்கிறது.