புதுடெல்லி: இந்திய கம்பெனி செயலாளர்கள் மையத்தின் (ஐசிஎஸ்ஐ) 51வது ஆண்டு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இந்த மையத்தில், நாடு முழுவதும் 59 ஆயிரம் உறுப்பினர்களும், 3.5 லட்சம் மாணவர்களும் உள்ளனர். கம்பெனி செகரட்டரீஸ் படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு இந்த மையம் உயர்தர கல்வியை அளித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:கார்ப்பரேட் நிர்வாகம் என்ற கருத்தே சிக்கலானது. ஆனால் இதன் விதிமுறைகள் தெளிவானது. வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, ஒற்றுமை, நாணயம் மற்றும் நேர்மை ஆகியவைதான் இதன் 4 தூண்கள். இந்தியாவை சர்வதேச தொழில் முதலீடுகளுக்கான இடமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இந்த முயற்சியில் கம்பெனி சட்டங்களை வெளிப்படைத் தன்மையுடன் அமல்படுத்த வேண்டும்.