அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் துணை ஆணையர் அலுவலகம் வெளியே தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 55 கி.மீ தொலைவில் அனந்த்நாக் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலகம் வெளியே இன்று காலை 11 மணியளவில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிகவும் பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் சுமார் ஒரு போக்குவரத்து போலீசார் உள்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து பேசிய அதிகாரி ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகள் மீதே கையெறி குண்டு வீசப்பட்டதாகவும், ஆனால், தீவிரவாதிகளின் இலக்கு தவறுதலாகி அந்த குண்டு சாலையில் விழுந்து வெடித்தாகவும் கூறியுள்ளார். இதனால் சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.