அயோத்தி வழக்கு தொடர்பான வாதங்களை வரும் 17ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : அயோத்தி வழக்கு தொடர்பான வாதங்களை வரும் 17ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 18-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் முன்னதாக முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

Related Stories: