திருச்சி: திருச்சியில் பிரபல நகை கடையில் 13 கோடி நகைகள் கொள்ளையடித்தவர்கள் திருவாரூரில் நடந்த வாகனை சோதனையில் ஒருவர் சிக்கினார். மற்றொருவன் தப்பியோடிவிட்டான். அவனை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் லலிதா ஜுவல்லரி இயங்கி வருகிறது. கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு நேற்றுமுன்தினம் அதிகாலை உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 28 கிலோ தங்க நகைகள், 145 கேரட் வைரம், 96 கிராம் பிளாட்டினம் என ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். நேற்று 2வது நாளாக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடையில் உள்ள 190 பேரில் 10 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். கொள்ளை கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என வடமாநில ஊழியர்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 கொள்ளை கும்பல் ஊடுருவல்: புதுக்கோட்டையில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள்தான். அவர்கள், தமிழகத்தில் ஜார்க்கண்ட்டை சேர்ந்த 10 கொள்ளை கும்பல் ஊடுருவி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.அதில் ஒருவனை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் மற்றொருவன் தப்பியோடி விட்டான். பிடிப்பட்ட நபரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் அவர் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற மடப்புரம் மணிகண்டன் (32) என்று தெரியவந்தது. இவரிடம் விசாரித்தபோது திருச்சி நகை கொள்ளையில் இவன் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரிந்தது. அவன் வைத்திருந்த பையில் இருந்த நகைகளில் இருந்த பார்கோடுகளை ஸ்கேன் செய்துபார்த்தபோது அது லலிதா ஜூவல்லரி நகைகடையில் கொள் ளை போனது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய கூட்டாளி திருவாரூரைசேர்ந்த சுரேஷ் (28) என்பவரை பிடிக்க திருவாரூர் முழுவதும் போலீசார் உஷார் படுத்த ப்பட்டுள்ளனர். சுரேஷை பிடிக்க தனிப்படையினர் அவனது வீடு மற்றும் நண்பர்களின் வீடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.