வாஷிங்டன்: 165 போயிங் 737 என்.ஜி. விமானங்களின் கட்டுமானத்தில் விரிசல்கள் உள்ளனவா? என்பது தொடர்பாக உடனடியாக ஆய்வு நடத்துமாறு தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. 737 மேக்ஸ் ரக விமானங்கள் எத்தியோப்பியா, இந்தோனேசியாவில் விழுந்து நொறுங்கியதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த ரக விமானங்களின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டன. இதனால் போயிங் நிறுவனம் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கும் நிலையில், தற்போது அந்நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீனாவில், 737 என்.ஜி ரகத்தின் விமானத்தில் சிறுசிறு மாற்றங்கள் மேற்கொண்ட போது அதன் கட்டுமானத்தில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போயிங் கூறியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா விமான போக்குவரத்து நிர்வாகத்திற்கு போயிங் தகவல் கொடுத்தது.
போயிங் 737 என்.ஜி. விமானங்களில் விரிசல் உள்ளதா?: உடனடி ஆய்வு நடத்த விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா உத்தரவு
- விபத்தில்
- விமானங்கள்
- விமான சேவையை ஆர்டர் செய்கிறது
- எங்களுக்கு
- ஆய்வு விமானங்கள்
- போயிங் 737 என்ஜி விபத்து: ஆய்வு நடத்துதல்