மும்பை: பஞ்சாப் அன்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி) கடன்கள் வாங்கி மோசடி செய்வதற்காக மட்டும் சுமார் 21,000 போலி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. வங்கி கடன் மோசடி குறித்து போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்
ளது. மும்பை பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசில் அளிக்கப்பட்ட புகாரில், போலி கணக்குகள் தொடங்கி வங்கியில் ரூ.4,355 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனர். இந்த தொகை வாராக்கடனாக உள்ளது. இதனால் வங்கியின் செயல்பாடு முடங்கிவிட்டது. ஒரு தனிப்பட்ட நிறுவனம் மற்றும் குரூப் ஆப் கம்பெனிகள் மட்டும் 44 போலி கணக்குகள் மூலம் கடன்கள் வாங்கி ஏமாற்றியுள்ளன.