கொல்கத்தா; துர்கா பூஜைக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய பாடல், ஷ்ரேயா கோஷலால் பாடப்பட்டு யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொ ட்டி கடந்த 5 ஆண்டுகளாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி துர்கா பூஜை தொடர்பான பாடல்களை எழுதி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு துர்கா பூஜைக்கான பாடலையும் மம்தா எழுதியுள்ளார். இந்த பாடலை பாடகி ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் ஜீத் கங்குலி இசையமைத்துள்ளார்.