போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி தாலுகா வணிக வளாக கடையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். போச்சம்பள்ளியில் கடந்த 2001ம் ஆண்டு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, 37 வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. இந்த பஸ் நிலையத்திற்கு சென்னை, பாண்டிசேரி, சேலம், திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட நகரங்களுக்கு போச்சம்பள்ளி வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்தில் ஓட்டல் கடை, டீக்கடை, பழக்கடை, உரக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வணிக வளாகத்தில் ஜெகதீசன் என்பவர் உரக்கடை வைத்துள்ளார்.