புதுடெல்லி: கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ராகுல் காந்தி நேற்று சந்தித்து பேசினார். கேரளாவில் சில நாட்களுக்கு முன் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழையினால் பெரும் சேதமடைந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை ராகுல் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
அப்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதி மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தினார்.