கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுசெல்கின்றனர். மேலும் நோயாளிகளை உடனிருந்து கவனிக்க அவர்களது உறவினர்கள் வருவார்கள். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில் குடந்தையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்றுகாலை பலத்த காற்று வீசியது. அப்போது அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றுச்சுவரை ஒட்டி உள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து காம்பவுன்ட் மற்றும் அதையொட்டி உள்ள கச்சேரி சாலையில் சாய்ந்தது.