சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள் 2வது நாளாக பாதிப்பு..!!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள் 2-வது நாளாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்து வரும் மழையால் மோசமான வானிலை நிலவி வருகிறது. அபுதாபி, திருச்சி, டெல்லி, திருவனந்தபுரம், அந்தமானில் இருந்து வந்த 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. 4 விமானங்கள் வானில் ஒரு மணி நேரமாக வட்டமடித்த நிலையில், மழை ஓய்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.

 

The post சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள் 2வது நாளாக பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: