குஜராத் பேருந்து விபத்தில் 21 பேர் பலி

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி நகர் அருகே திரிசூல மலைப் பகுதியில் 70 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் பெய்த  கனமழை காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தறிகெட்டு ஓடி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் 21 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். விபத்து பகுதிக்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: