சென்னை: தமிழ் வழியில் படித்தவர்கள் வேலை பெற வேண்டும் என்பதற்காக சில மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசு சார்பில், முன்னாள் மேயர் சிவராஜின் 128வது பிறந்தநாள் விழா தங்கசாலையில் நேற்று காலை நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடையே கூறியதாவது:டிஎன்பிஎஸ்சி தேர்வு விவகாரத்தில் மொழி குறித்த வினாக்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் அழகிரி பேசியுள்ளார். அரசு பணியில் ஆங்கிலம் படித்தவர்கள்தான் 60 சதவீதம் தேர்வாகி வருகின்றனர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.