புதுடெல்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதம் இதுவரை, பங்குச்சந்தை, கடன் பத்திரங்களில் ₹7,714 கோடி முதலீடு செய்துள்ளனர். பொருளாதார மந்த நிலை, தொழில்துறை உற்பத்தி பின்னடைவு, வேலையிழப்புகள் போன்ற காரணங்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாக 5 சதவீதத்துக்கு வந்து விட்டது. இதனால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை குறைத்துக்கொண்டனர். நிகர முதலீட்டில் பெரும்பாலானவற்றை வாபஸ் பெற்றனர். ஸ்திரமற்ற நிலை காரணமாக இவர்கள், கடந்த ஜூலை மாதத்தில் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் ₹2,985.88 கோடி, ₹5,920.02 கோடியை விலக்கிக் கொண்டனர்.