திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

சென்னை : திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.  ‘’ஜனநாயகம் வளர்ந்த வரலாறு’’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவராமன் தலைமை தாங்கினார். சக்கரபாணி ரெட்டியார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டு வழக்கறிஞர் கே.என்.கல்யாணராமன் எழுதிய ஜனநாயகம் வளர்ந்த வரலாறு என்ற நுலை வெளியிட்டார்.  பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஏற்கனவே பாரம்பரியமாகவே நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் செல்வாக்குள்ள தொகுதி, அதிலும் இப்பொழுதுள்ள திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி.

எல்லாத்தரப்பு மக்களும் ஒன்று சேர்த்து அமைத்திருந்த கூட்டணி என்பதால் மிக வலுவான கூட்டணியாக உள்ளது. எனவே இந்த கூட்டணி இடை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெரும். எனவே திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின்  வேட்பாளராக போட்டியிடுகின்ற ரூபி மனோகரன் மிகப்பெரிய அளவில் வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது உறுதி’’ என தெரிவித்தார்.

Related Stories: