சென்னை: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் மு.க.ஸ்டாலினை நேற்றிரவு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் நேற்றிரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். மு.க.ஸ்டாலினும் அவர் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: நிச்சயமாக, உறுதியாக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் பெற்ற வெற்றியை விட, பன்மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார்.