ஜோத்பூர்: மான் வேட்டையாடிய வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நடிகர் சல்மான்கான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஜோத்பூர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே உள்ள கங்கானி என்னும் இடத்தில் அரிய வகை மானை கடந்த 1998ம் ஆண்டு வேட்டையாடியதாக பிரபல நடிகர் சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில், கீழ் நீதிமன்றத்தில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றது.