ஜெருசலம்: கடந்த 80 ஆண்டுகளுக்கு முன், இரண்டாம் உலகப் போர் தொடங்கிய தினத்தில், யூதத் தலைவருக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதத்தை இஸ்ரேல் அரசு முதல் முறையாக வெளியிட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தின் போது, இந்திய தலைவர்களுக்கு பம்பாய் சியோனிஸ்ட் அசோசியேஷன் தலைவராக இருந்த யூத தலைவர் ஷோஹெட் ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால், மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் ஷோஹெட்டுக்கு நட்பு நிலவிவந்தது. கடந்த 1939ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி யூதர்களின் புத்தாண்டையொட்டி, காந்தி, ஷோஹெட்டுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.