கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த தேனியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கோயம்புத்தூரில் கைது

கோவை: கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த தேனியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டனர். உக்கடத்தில் நடந்த வாகனசோதனையின் போது கல்லூரி மாணவர்கள் கேசவன், ராம்குமார் ஆகியோர் கஞ்சாவுடன் பிடிபட்டனர். இதை தொடர்ந்து கஞ்சா வியாபாரி சுடலைமணி என்பவரிடம் கொடுப்பதற்காக 1.250 கிலோ கஞ்சாவை தேனியிலிருந்து கடத்தி வந்தது அம்பலமானது. தேனியில் கஞ்சாவை ரூ. 4 ஆயிரத்திற்கு வாங்கி கோவையில் வியாபாரி சுடலைமணிக்கு ரூ.14 ஆயிரத்திற்கு விற்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.

Related Stories: