மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு வழக்கு: மின்வாரிய தொழிற்சங்கங்களை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு வழக்கில் மின்வாரிய தொழிற்சங்கங்களை சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த தொடரப்பட்ட வழக்கில் தமிழக மின்வாரியம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. மின்வாரிய அலுவலகத்தில் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருகை புரிவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகைப்பதிவு கோரி மனு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நிதிபதிகள் மின்வாரிய தொழிற்சங்கங்களின் பிரதிவாதிகளாக சேர்க்க உத்தரவிட்டு நவம்பர் 5ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Stories: