மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் தொடரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புனே மாவட்டத்தில் மழை வெள்ளம் மற்றும் சுவர் இடிந்து விழுந்த விபத்து சம்பவங்கள் காரணமாக 9 வயது சிறுவன் உள்பட இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.